இரத்த பரிசோதனை நிறுத்தப்பட்டமையால் பாதிப்பிற்கு உள்ளாகும் நோயாளர்கள்
இரசாயனப் பதார்த்தங்களின் பற்றாக்குறையால் இரத்தப்பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல வைத்தியசாலைகள் தெரிவித்துள்ளன. அந்தவகையில் லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் இவ்வாறு இரத்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நோயாளர்கள் அவதி இதனால், தனியார் ஆய்வகங்களில் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு நோயாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை , இரசாயனப் பதார்த்தங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் வைத்தியசாலை அமைப்பு வீழ்ச்சியடையாது என காசல் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed